tamilnadu

img

இஸ்லாமிய பேராசிரியர் சமஸ்கிருதம் வகுப்பெடுப்பதா?  -ஏபிவிபி அராஜகம்

இஸ்லாமிய பேராசிரியர் சமஸ்கிருத வகுப்பு எடுப்பதை கண்டித்து ஏபிவிபி மாணவர்கள் அமைப்பினர் அராஜகமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 6-ம் தேதி இந்தப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையில் பிரோஸ்கான் என்பவர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர், சமஸ்கிருத மொழியில் பி.ஹெச்டி படித்தவர். பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையில், இந்து பல்கலைக்கழகத்தில் பிரோஸ்கானுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், இஸ்லாமியர் பிரோஸ்கானை தங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது என, சமஸ்கிருதம் படிக்கும் அகில பாரத வித்யார்த்தி  பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  பிரோஸ்கார் பணிக்கு அமர்த்தப்பட்டதில் இருந்து ஒரு நாள் கூட பாடங்களை எடுங்க விடாமல் தொடர்ச்சியாக ஏபிவிபி மாணவர்கள் திட்டமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். 
பல்கலைக்கழக நிர்வாகம் ``மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. போராட்டம் நடத்தினாலும் பிரோஸ்கானின் பணி நியமனம் ரத்து செய்யப்படாது'' என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறியுள்ளது. மேலும், `` பேராசிரியர்களுக்கு பணி அளிப்பது எல்லாம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது '' எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனக்குழு, `நாங்கள் நடத்திய இன்டர்வியூ மற்றும் தகுதி அடிப்படையில் மற்றவர்களைவிட பிரோஸ்கான் திறமையானவராக இருக்கிறார். எனவே, அவருக்குப் பணி நியமனம் வழங்கலாம்' என்று துணை வேந்தர் ராகேஷ் பட்னாகரிடத்தில் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, பிரோஸ்கானுக்கு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறையில் துணைப் பேராசிரியர் பணி வழங்கப்பட்டது 
பல்கலைக்கழக துணைவேந்தர் ராகேஷ் பட்னாகர் கூறுகையில், ``பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துத் தகுதியானவர்களைத் தேர்வு செய்துள்ளோம். மதத்தையோ அல்லது சாதியைக் காட்டி ஒருவருக்கு பணி வழங்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை'' என்றார்.
மேலும் சமஸ்கிருதத்துறை தலைவர் உமாகாந்த் சதுர்வேதி, ``நேர்முகத்தேர்வுக்கு 29 பேர் வந்திருந்தனர். 10 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். நேர்முகத்தேர்வில் மற்றவர்கள் 10 மதிப்பெண்களுக்கு 2 மதிப்பெண் எடுத்தனர். பிரோஸ்கான் 10-க்கு 10 மதிப்பெண்கள் எடுத்தார். தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
பிரோஸ் கான் ராஜஸ்தான் முதலமைச்சரிடம் இருந்து மாநில நிலை சமஸ்கிருத அறிஞருக்கான விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.